கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..?

மற்ற விலங்குகளைப் பற்றி கனவு காண்பதை போல், பாம்புகளை கனவில் கண்டால் பல்வேறு அர்த்தங்கள் உள்ளது.

இந்துக்கள் ஆலயங்களில் வைத்து பாம்புக்களை வழிபடுகின்றனர். சிலர் இதில் ஆர்வம் கொள்வதில்லை.

பாம்புகள் பயத்தை ஏற்படத்தும் வகையில் இருக்கும் போதிலும் கூட, கனவில் வரும் பாம்புகள் பொதுவாக சிக்கலான ஒன்றாக இருக்கும்.

ஏனெனில் பாம்புகள் கனவில் வந்தால், அதற்கு பல அர்த்தங்கள் உள்ளது. அதே போல் பல அடுக்கு சின்னங்களையும் அவை குறிக்கும். அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…

உங்களை எச்சரிக்கும் முயற்சியாக இருக்கலாம்

ஆச்சரியங்கள் மூலம் பாம்புகள் தடுமாறும். இவற்றை இரகசியங்களோடு தொடர்புப்படுத்தலாம். “புல்லில் உள்ள பாம்பு” என்றால் நம்ப முடியாத ஒருவர், உங்களை ஏமாற்றக்கூடியவர், உங்களிடம் இருந்து இரகசியத்தை காப்பவர் என குறிப்பிடலாம்.

சுவாரசியமாக இது வேறு ஒரு நபராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களுக்கு அறிந்த உண்மை ஒன்று இருக்கலாம், ஆனால் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருப்பீர்கள்.

மறைந்திருக்கும் பேரார்வங்களை கொண்டுள்ளீர்களா?

கனவில் வரும் பாம்புகள், அடிப்படையில் நாம் பயப்படக்கூடிய ஆற்றல் மிக்க அறிகுறிகளை குறிக்கும்.

அதற்கு காரணம் அவை கொண்டுள்ள பலமும், அது கொண்டு வரும் மாற்றமே. சீறி எழும் பாம்பு, அல்லது தூங்கிக் கொண்டிருந்த நிலையில் இருக்கையில் விழிக்கும் பாம்பு, அல்லது சுருண்டிருந்த பாம்பு திடீரென உயிரை பெறுவது போன்றவைகள் எல்லாம் சுலபமாக ஓடத் துவங்கும் உங்களது ஆற்றல், பேரார்வம் மற்றும் உள்நோக்கத்தை குறிக்கும்.

ஆன்மீக வளர்ச்சியைக் குறிக்கும்

கனவுகளில் வரும் பாம்புகள், ஆன்மீக செயல்முறையான, முதுகு தண்டின் அடியில் இருந்து தலையின் உச்சியை அடைந்து, அதற்கு மேல் செல்லும் ஆற்றலான குண்டலினியை விழிக்க வைக்கும் ஒன்று என சில கிழக்கு கலாச்சாரங்கள் நம்புகின்றன. கனவில் வரும் பாம்புகள் உங்கள் அழிவை குறிப்பதற்கு பதிலாக உங்களை மாற்ற முயல்வதாகும். அதனால் அதை எதிர்த்து போராடுவதா, அல்லது ஓடுவதா அல்லது மாற்றத்தை தழுவிக் கொள்வதா போன்றவைகள் எல்லாம் உங்களை பொறுத்தது.

பாம்பு என்பது மயக்கத்தை குறிக்கும்

பொதுவாகவே, கனவில் பாம்பு வந்தால், நீங்கள் ஒரு கஷ்டமான சூழ்நிலையை கையாண்டு கொண்டிருக்கிறீர்கள் அல்லது உங்களது வாழ்க்கையில் உணர்ச்சி ரீதியாக போராடி வருகிறீர்கள் என அர்த்தமாகும்.

இந்த கனவு பகுப்பாய்வின் நேர்மறையான பக்கத்தை பார்த்தீர்கள் என்றால், பாம்புகளைப் பற்றிய கனவு, நடந்து கொண்டிருக்கும் குணமாக்குதல் மற்றும் மாற்றத்தை குறிக்கும்.

குட்டி பாம்பு

குட்டி பாம்பை உங்கள் கனவில் நீங்கள் காண்கிறீர்கள் என்றால் அச்சுறுத்தலை நீங்கள் குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என அர்த்தமாகும்.

நீங்கள் பாம்பை கொன்றாலோ அல்லது பாம்பு இறந்தாலோ, உங்களை சுற்றியுள்ள ஆபத்து விலகி விட்டது என அர்த்தமாகும்.

இரக்கமற்ற நபரை பாம்பு குறிக்கும்

உங்களை சுற்றியுள்ள தீய எண்ணம் கொண்ட இரக்கமற்றவரைக் கூட பாம்பு குறிக்கும். அத்தகைய ஆணையோ பெண்ணையோ நம்ப வேண்டாம் என உங்கள் கனவு கூறுகிறது. உங்கள் உணர்வுகளை நன்றாக தெரிந்த ஒருவரிடம் வெளிப்படுத்த பயமாக உள்ளதென்றால், உங்கள் கனவில் பாம்புகள் வரலாம்.

பாம்பு கனவை எப்படி விளக்குவது?

பாம்புகளின் அறிகுறிகள் நேர்மறையானதாக இருக்கலாம் அல்லது எதிர்மறையானதாக இருக்கலாம். அது பாம்பின் மீது உங்களுக்கு உள்ள உணர்வுகளை பொறுத்தது. சில நேரங்களில், பாம்புகள் மீது ஆரம்பம் முதல் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பயத்தை கடந்து செல்வது கஷ்டமாக இருக்கும். அதனால் உங்கள் கனவைப் பற்றி அதிகமாக நீங்கள் ஆராயலாம்.

ஞானத்தின் மூலம்

ஆசியா மற்றும் பூர்வீக அமெரிக்க கலாச்சாரங்களுக்கு மத்தியில், பாம்பு என்பது ஞானத்தின் மூலமாகும். பாம்பு அதன் தோலை உரித்து, மீண்டும் புது தோலை பெறும் ஆற்றலில் இருந்து தான் இந்த ஞானத்தின் யோசனை தோன்றியது. இந்த அடிப்படையில் ஒருவர் பாம்பைக் பற்றி கனவு கண்டால், புதுப்பித்தல், பிரச்சனையை போக்குதல் மற்றும் நல்ல விஷயங்கள் பற்றியான கனவாகும் அது.

கருவுறும் பாம்பு

கருவுறும் தன்மை, பிறப்பு, இறப்பு மற்றும் உயிர்த்தெழுதல் போன்றவற்றை குறிக்கும் உயிரினமாக, பாம்பை பழங்காலத்தில் அனைத்து திசையிலும் வழிபட்டு வந்தனர். உலகத்தை அரவணைத்த படி உள்ள பாம்பு என்பது பொதுவாக உள்ள ஒரு சித்திரமாகும். நார்டிக் ஜோர்முன்கந்தர் முதல் இந்துக்கள் வரை, உலகத்தை ஒன்றாக வைத்திருக்கும் பொறுப்பை பாம்பு கொண்டுள்ளது என இந்த சித்திரம் மூலம் நம்பி வந்துள்ளனர். இந்த அண்ட பாம்பு, முட்டையைச் சுற்றி வளைத்துள்ள வண்ணம் இருப்பதால், கருவுறும் தன்மை மற்றும் மறு பிறப்பு, அண்டத்தின் உருவாக்கம் போன்றவற்றை தெளிவாக இது குறிக்கும்.

அழிக்கும் பாம்பு

கனவில் வரும் மரணம் எப்போதுமே மாற்றத்தை குறிக்கும். கனவில் வரும் பாம்பு உங்களை கடிப்பதன் மூலம், அல்லது கொத்துவதன் மூலம், அல்லது விழுங்குவதன் மூலம், அல்லது வேறு ஏதேனும் வழியில் உங்களை அழிக்க முற்பட்டால், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தடுத்து, வாழ்க்கையின் நல்ல விஷயங்கள் (நம்பிக்கை, உறவு, போன்றவைகள்) போவதற்கான ஒரு அழைப்பாக அதனை நீங்கள் கருதலாம். இதை இப்படியும் சொல்லலாம் – வேறு ஒன்றை பெறுவதற்காக மற்றொன்றை இழக்க போகிறீர்கள்.

ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும், இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும், பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும், பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும், பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும், காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று பொருள், பாம்பு கடித்து இரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம், கழுத்தில் மாலையாக பாம்பு விழுவதாக கனவு கண்டால் பணக்காரன் ஆகலாம்.

நல்ல கனவு கண்டால் மறுபடியும் நித்திரை செய்யலாகாது. கெட்ட கனவு கண்டால் கடவுளை தியானித்து பிறகு நித்திரை செய்ய வேண்டும்.

அதனால் உங்களது மோசமான முன்னாள் அனுபவங்களை கடந்து செல்ல டைரி எழுதுங்கள் அல்லது மனநல மருத்துவரை சந்தியுங்கள்.

இதனை சரி செய்யாமல் விட்டு விட்டால், இந்த பிரச்சனைகள் பாம்பின் ரூபத்தில் உங்கள் கனவில் வந்து உங்களை பாடாய் படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*