தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தல அஜித் இவர் என்றும் பல்வேறு மாநிலங்களில் பல ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான விசுவாசம் மற்றும் நேர்கொண்டபார்வை நடித்த திரைப்படங்கள் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மிகப் பெரும் வரவேற்பு பெற்று மாபெரும் வசூல் சாதனை நிகழ்த்தியது.
அஜித் இந்த வருடத்தின் டாப் வசூல் நாயகன். விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை இரண்டு படங்களுமே மக்களின் பேராதரவை பெற்றதோடு டாப்பாக வசூலும் செய்தது.
இப்படங்களை தொடர்ந்து அஜித் தன்னுடைய வலிமை படத்திற்காக உடலமைப்பை பிட் செய்யும் பயிற்சியில் உள்ளார். படம் போலீஸ் அதிகாரியை சுற்றிய படம் என்பது மட்டும் தெரியும், மற்றபடி துணை நடிகர்கள் யார் யார் என்பது இன்னும் தெரியவில்லை.
தற்போது படம் குறித்த அப்டேட் என்னவென்றால் அஜித்தின் வலிமை படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 13ம் தேதியில் இருந்து தொடங்குகிறதாம்.
படம் பாதி வெளிநாடுகளில் தான் படப்பிடிப்பு நடக்கும் என்கின்றனர்.
இந்த நிலையில் தல அஜித் அடுத்த படம் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்காக தல அஜீத் தற்போது விக்ரம் வேதா இயக்கிய புஷ்கர் காயத்ரி மற்றும் நேற்று இன்று நாளை படங்களை இயக்கிய இயக்குனர் ஆகியோரை அழைத்து கதை கேட்டு உள்ளாராம்.
இவர்களில் ஏதாவது ஒரு இயக்குனரை தேர்ந்தெடுத்து அடுத்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இளம் இயக்குனர்களுக்கு தல அஜித் வாய்ப்பு கொடுத்துள்ளதால் இப்படம் மீது அனைத்து தரப்பு ரசிகர்களும் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதைப் பற்றிய உங்களது கருத்துக்களை பதிவு செய்யவும்.