வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர இந்த ஒரு பழம் போதும்! ஒரே மாதத்தில் கிடு கிடுனு முடி வளரும்?

இன்றைய காலகாட்டத்தில் முடி சார்ந்த பிரச்சினைகள் பத்தில் 6 பேருக்கு உள்ளது என ஒரு ஆய்வு சொல்கின்றது.

முடி உதிர்வு, பொடுகு தொல்லை, வழுக்கை என முடி பிரச்சினை இப்படி வரிசை கட்டி கொண்டே போகிறது.

அதுவும் இன்றைய நவீன உலகில் இதன் தாக்கம் இன்னும் கூடவே உள்ளது. அதை விட மோசமானது, கண்ட வேதி பொருட்களையெல்லாம் தலைக்கு தடவுதல் தான். இது மேலும் பாதிப்பை அதிகமாக்குமே தவிர குறைக்காது.

உங்களின் முடி பிரச்சினை அனைத்திற்கும் விரைவிலே தீர்வை தர பப்பாளி உள்ளது. இதை இந்த பதிவில் கூறுவது போல பயன்படுத்தினால் முடி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி கிடைத்து விடும்.

உங்களுக்கு ஏற்படுகின்ற முடி பாதிப்பை தடுக்க மிக எளிய வழி உள்ளது.

இதற்கு தேவையானவை…
தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்
பப்பாளி துண்டு 5
தயாரிப்பு முறை
முதலில் பப்பாளியை நன்றாக அரைத்து கொள்ளவும். அடுத்து இதனுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு தலைக்கு தடவவும். 30 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முடி வளர்ச்சியை அதிகரிக்க
முடியின் வளர்ச்சியை அதிகரிக்க இந்த குறிப்பு அருமையாக உதவும்.
தேவையானவை
கருவேப்பிலை ஒரு கைப்பிடி
பப்பாளி 5 துண்டு
யோகர்ட் 3 ஸ்பூன்
செய்முறை
பப்பாளி மற்றும் கருவேப்பிலையை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். அடுத்து இந்த கலவையுடன் யோகர்ட் கலந்து தலையின் ஒவ்வொரு பகுதியிலும் தடவவும்.
20 நிமிடம் ஊற வாய்த்த பின்னர் தலையை அலசவும். முடியை சீக்கிரத்திலே வளர வைக்கும் தன்மை இந்த குறிப்பிற்கு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*