பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பின் அபிராமி பதிவிட்ட முதல் பதிவு!

பிக்பாஸின் 56வது நாளான நேற்றைய எபிசோடில் இருந்து எலிமினேட் ஆகியுள்ளார் அபிராமி. பிக்பாஸ் வீட்டில் முகேன் மீது காதல் கொண்டிருந்த இவர் அடிக்கடி அழுது கொண்டிருந்ததால் கடுப்பான பார்வையாளர்கள் குறைவான ஓட்டுகளை போட்டு வெளியே அனுப்பியுள்ளனர்.

மிஸ் தமிழ்நாடு பட்டத்தை பெற்றுள்ள இவர் அஜித்தின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் மிக பெரும் விவாதத்தை கிளப்பிய நேர்கொண்ட பார்வை படத்திலும் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

வெளியே வந்ததும் தான் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை திரையரங்கில் ரசிகர்களுடன் கண்டுகளித்தார் அபிராமி.இப்படத்தின் ரிலீஸ் தேதியன்று பிக்பாஸ் வீட்டினுள் இருந்ததால் வெளியே வந்து தனது நடிப்பிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை கண்டு பிரம்மிப்பில் பதிவிட்டிருக்கும் பதிவு தான் இது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*