கோயிலுக்கு செல்லும்போது இந்த தவறுகளை மட்டும் கண்டிப்பா பண்ணாதீங்க!

கோவிலுக்கு சென்று வரும்போது சில காரியங்களை செய்யக்கூடாது என்று சொல்வது ஏன் தெரியுமா? முன்பெல்லாம் ஒரு கோவிலுக்கு போகவேண்டுமென்றால், அங்குள்ள தெப்ப குளத்தில் குளித்துவிட்டு கோவிலுக்குள் போனார்கள். அது எதற்காக என்றால் உடலை குளிர்விப்பதற்காகத்தான் அவ்வாறு செய்தார்கள்.

பொதுவாக நம் உடலை சுற்றியும் நல்ல அணுக்கள், தீய அணுக்கள் என இருக்கும். அதே போல நேர்மறை எதிர்மறை ஆற்றல்களும் நிறைந்திருக்கும்.

அது நமது உடல் எங்கும் பரவியுள்ள காரணத்தினால் கோவிலுக்கு நாம் செல்வதினால் எதிர்மறை ஆற்றல்கள் நம்மிடம் இருந்து விலகி நேர்மறை ஆற்றல் முழுவதையும் நம்மை வந்தடைகின்றது.

அந்தவகையில் கோவிலுக்கு சென்று வரும்போது சில காரியங்களை செய்யக்கூடாது என நமது முன்னோர்கள் அடிக்கடி நம்மிடம் கூறுவதுண்டு. ஏனெனில் நம்மை வந்தடைந்த நேர்மறை ஆற்றல் எல்லாம் சென்று விடும் எனப்படுகின்றது.

தற்போது அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

கோவிலுக்குள் செல்லும் போது குறைந்தபட்சம் தலையில் தண்ணீர் தெளித்து கொண்டு அல்லது நமது காலையாவது கழுவிக்கொண்டு கோவிலினுள் செல்லவேண்டும்.கோவிலுக்கு சென்று வரும்போது நேராக வீட்டிற்குத்தான் போகவேண்டும். ஏனெனில் நாம் வெறும் காலோடு கோவிலை சுற்றிவரும்போது அங்குள்ள நேர்மறை ஆற்றல்களால் நமக்குள் உட்கிரகிக்கப்படும். மேலும் இவை வீட்டில் பரவும்.

வீட்டிற்கு சென்றவுடன் உடனடியாக கால்களை கழுவ கூடாது.
சிலர் கோவிலுக்கு சென்று வந்ததும் குளிக்கவும் செய்வார்கள். இது மிகப்பெரிய தவறாகும். அது நாம் பெற்ற வாரத்தை இழப்பதற்கு சமமாகும்.கோவிலுக்குள் நுழையும்போது எப்போதும் தலைவாசல் வழியாக நுழைவதுதான் சிறப்பானது. அதேபோல வெளியே செல்லும்போது புறமுதுகை காட்டி செல்லக் கூடாது.

சாமிக்கு சமர்பிக்கப்பட்ட மாலை பிரசாதமாக வாங்கிக் கொள்ளலாமே தவிர அவற்றை கழுத்தில் அணிந்துக் கொள்ளக் கூடாது. கோவிலில் பிரசாதமாக கொடுத்த பூக்களை நமது பூஜை அறையில் சாற்றவோ அல்லது வைக்கவோ கூடாது. கோவிலில் பிரசாதமாக கொடுக்கும் விபூதி, குங்குமம், சந்தனம் போன்றவற்றையும் வீணடிக்கக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*