சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் ஆர்டிஓ விசாரணை முடிந்துள்ள நிலையில் அதன் அறிக்கை பொலிசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
பிரபல நடிகையான சித்ரா கடந்த 9ம் தேதி தற்கொலை செய்து கொண்டார், இந்த வழக்கில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் திருமணமாகி 2 மாதங்களில் சித்ரா இறந்ததால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்பேரில், சித்ராவின் கணவர் ஹேம்நாத், அவரது பெற்றோர், நண்பர்கள், உறவினர்களிடம் ஆர்.டி.ஓ. நடத்தப்பட்டதாகவும், அதில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது, நடிகை சித்ரா தற்கொலை வழக்கு விசாரணை அறிக்கையை ஆர்.டி.ஓ. திவ்யஷி முழுமையாக முடித்துள்ளதாகவும், அதனை அவர் காவல்துறையினர் வசம் ஒப்படைத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, ஆர்டிஓ அளித்துள்ள அறிக்கையை மையமாக வைத்து காவல்துறையினரின் விசாரணை மேலும் தீவிரமாகும் என தெரிகிறது.